இங்குள்ள ஜாலான் துவாங்கு அப்துல் ஹலீம் பகுதியின் அரசு வளாகத்தில் உள்ள உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐஆர்பி) அலுவலகம் துப்புரவு பணிகளுக்காக இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.ஆர்.பி கம்யூனிகேஷன்ஸ் பிரிவு, ஓர் அறிக்கையில், வரி செலுத்துவோர் அனைத்து வரிவிதிப்பு விஷயங்களையும் ஆன்லைனில் துப்புரவு பணியின் போது நடத்துமாறு அறிவுறுத்த்தப்படுகிறது.
வரிவிதிப்பு பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகள், கருத்துகளை ஐ.ஆர்.பி.க்கு ஹசில் கேர் லைன் மூலம் 03-89111000 அல்லது 603-89111100 (வெளிநாடுகளில்) மூலம் அனுப்பலாம்.
பொதுமக்கள் ஐ.ஆர்.பியை ஹசில் லைவ் சாட் வழியாகவோ அல்லது https://maklumbalaspelanggan.hasil.gov.my/MaklumBalas/ms-my/.- பின்னூட்ட படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.