கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா !

போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஃபுட்பால் அசோசியேஷன் அறிவித்துள்ளது.

தற்போது ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக தேசிய கால்பந்தாட்ட லீக்கில் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடி வருகிறார்.
கடந்த ஞாயிறு அன்று பிரான்ஸ் அணியுடனான ஆட்டத்தில் விளையாடியிருந்தார் ரொனால்டோ.

இதனையடுத்து உடலில் அறிகுறிகள் இல்லாதப்போதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

எனினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ரொனால்டோவின் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் பங்கேற்க இருந்த நடைபெற உள்ள சுவீடன் அணியுடனான ஆட்டத்தில் ரொனால்டோ விளையாட மாட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போர்ச்சுகல் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே ரொனால்டோவுக்கு தொற்று உறுதியானதால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here