அம்பாங் காலை 8.35 மணியளவில் தாமான் மெலாவத்தி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
அத்தகவலின் படி துணி சலவை இடம் (லாண்டரி) இருக்கும் நன்கொடை உண்டியலை களவாடி சென்றதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவ்வட்டாரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அக்கடையில் இருந்தவர்கள் மைவி காரில் வந்த முகம் தெரியாத இருவர் அந்த நன்கொடை உண்டியலை களவாடி சென்றதாக கூறினர்.
அந்த உண்டியலில் வெறும் சில்லறை காசுகள் மட்டுமே இருந்ததாகவும் மேலும் அது குறித்து எந்த புகாரும் பெறவில்லை.
அதே வேளை அம்பாங்கில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் விரட்டி பிடிப்பதாக வைரலாகி வரும் வீடியோ உண்மையானதல்ல என்று அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஃபாரூக் பின் ஏசாக் தெளிவுப்படுத்தினார்.
அம்பாங் வட்டாரத்தில் கொள்ளை அல்லது வழிப்பறி நடந்தால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.