கோப்ரா படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்ட

தமிழ் சினிமாவில் சியான் என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தை பற்றி படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்து வருகிறது. மேலும் இதைக் கேட்ட விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதாவது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம்தான் கோப்ரா. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் ஆக்ஷன், த்ரில்லர் கலவையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளாராம்.

இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்தபோது குரானா பரவல் தீவிரமடைந்ததால், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு இந்தியா திரும்பியது. மேலும் எஞ்சியுள்ள காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறிருக்க ‘கோப்ரா’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளதாக அந்தப் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை கேட்ட விக்ரமின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், விக்ரம் பல கெட்டப்புகளில் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here