பீஜிங்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், தொடக்கத்தில் வைரஸ் வேகமாக பரவியபோதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி தங்கள் நாட்டில் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது.
ஆனால், தற்போதும் மிகச்சிறிய எண்ணிக்கையில் அந்நாட்டில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் வைரஸ் பரவும் நகரங்களை சீல் வைத்து மக்கள் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்வதை சீன அரசு தடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.
ஆனாலும், கடந்த சில நாட்களாக ஹூபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களில் கொரோனா உறுதியானதால் அந்நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், விறபனையாளர் ஒருவரால் மேலும் ஒரு மாகாணத்தில் வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த விற்பனையாளர் கடந்த சில நாட்களாக அண்டை மாகாணமான ஜிலின் மாகாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.
அங்கு 2 நகரகளுக்கு சென்ற அவர் பலத்தரப்பட்ட மக்களைச் சந்தித்து தான் விற்பனை செய்ய உள்ள பொருள் குறித்து விளக்கம் அளிப்பது பொருளை விற்பனை செய்வது தொடர்பான வேலை செய்துவந்துள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக அவ்ருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. வைரஸ் பரவியிருப்பது தெரியாமல் அவர் ஜிலின் மாகாணத்தில் உள்ள இரண்டு நகரங்களுக்கு சென்று பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளார்.
இறுதியாக, ஜிலின் மாகாணத்தில் 109 அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஜிலின் நகருக்கு வந்து தான் பணியாற்றும் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யவந்த விறபனையாளரால் தான் 109 கொரோனா பரவியுள்ளது என்பதை
சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.