பா. வே. மாணிக்க நாயக்கர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871- ஆம் ஆண்டு பிப்ரவரி 2- ஆம்தேதி பிறந்தார்.
வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.
இவர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் ஆவார். சென்னையில் பொறியியல் கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துகளைக் கொண்டு உலகிலுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர்.