நாகர்கோவில்:
கூட்டத்தில் மார்ச் மாதம் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுபற்றி தமிழ்நாடு மாநில பளு தூக்கும் சங்க தலைவரும், அகில இந்திய பளு தூக்கும் சம்மேளன துணை தலைவருமான பொன். ராபர்ட் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-கோப்புப்படம்
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி நாகர்கோவிலில் உள்ள பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கலலூரியில் மார்ச் 14- ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 17- ஆம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பளு தூக்கும் வீரர்கள் 400 பேரும், வீராங்கனைகள் 300 பேரும் பங்கேற்க உள்ளனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக போட்டி நடத்தப்படும். உடல் எடை அடிப்படையில் தனித்தனி பிரிவுகள் பிரிக்கப்பட உள்ளன.
அதாவது ஆண்களுக்கு 55 கிலோவுக்கு உட்பட்டவைகளில் தொடங்கி 109 கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 10 பிரிவுகள் பிரிக்கப்படும். இதேபோல பெண்களும், 45 கிலோவுக்கு உட்பட்டவர்களில் இருந்து தொடங்கி 87 கிலோவுக்கு அதிகமாக உடல் எடை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் , வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். அதோடு அதிக எடை தூக்குபவர்களும் காமன்வெல்த் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டிக்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய பளு தூக்கும் சம்மேளன தலைவர் பி.பி.பைஸ்யா எம்.பி., பொதுச்செயலாளர் சகதேவ் யாதவ், நிர்வாகிகள் இணைந்து செய்து வருகிறார்கள். பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அளவில் பளு தூக்கும் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.