கோவிட்-19 நோயாளிகளை ஏற்றி வந்த பேருந்து விபத்துக்குள்ளானது

கோலாலம்பூர்: செர்டாங்கில் உள்ள யுபிஎம் டோல் பிளாசாவில் கோவிட் -19 நோயாளிகளை ஏற்றிச் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ் விபத்தில் சிக்கியது.

செர்டாங்கில் உள்ள மேப்ஸில் உள்ள குறைந்த இடர் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்திற்கு செல்லும் வழியில் இந்த பஸ் சனிக்கிழமை (பிப்ரவரி 27) பிற்பகல் 3 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

ஆறு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் மேப்ஸுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். ஆனால் பஸ் டிரைவர் மற்றும் இணை ஓட்டுநரின் நிலை இன்னும் அறியப்படவில்லை.

எக்ஸ்பிரஸ் பஸ்ஸின் முன் பகுதி மோசமாக சேதமடைந்தது. மேலும் காலை 10 மணிக்கு பயணத்தைத் தொடங்கிய பேராக்கிலுள்ள சாங்கட் ஜாங் கிளஸ்டரிலிருந்து பஸ் நோயாளிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here