கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 367,213 தனி நபர் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
45,854 நபர்களுடன் சிலாங்கூர் அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த இடத்தில் பேராக் (42,227), சபா (36,443), கோலாலம்பூர் (33,500), சரவாக் (32,665) உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
இன்று தனது ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு விளக்கப்படத்தின்படி, 27,131 நபர்களைப் பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் பகாங் (26,574), கெடா (25,492), பினாங்கு (22,037), கிளந்தான் (17,904) மற்றும் நெகிரி செம்பிலான் (15,958).
தெரெங்கானு 15,726 , மலாக்கா (9,954), பெர்லிஸ் (8,795), புத்ராஜெயா (4,611), லாபுவான் (2,342) பேர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம், நாட்டின் மக்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. – பெர்னாமா

























