கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி.!!

“பெரியவர்கள் பிள்ளை” என்று அழைக்கிறார்கள்…!

ஷிவாங்கி சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் பாடியதால் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர். அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அவர் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அவரை மக்கள் ரசிக்கின்றார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதில் விருது வாங்கியவுடன் பேசிய ஷிவாங்கி கண்கலங்கிக்கொண்டே ” எனது குரலால் நான் பள்ளியில் படிக்கும் போது அவமானப்படுத்த பட்டதாகவும், பசங்கள் எல்லாரும் அந்த பொண்ணு ஒரு மாதிரி பேசும் என்றும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவுடன் எல்லாரும் என்னை அவர்கள் விட்டு குழந்தையாக பார்த்தார்கள்.

தன்னை அனைத்து பெரியவர்களும் ஷிவாங்கி பிள்ளை ஷிவாங்கி பிள்ளை, ஷிவாங்கி பிள்ளை ” என அழைப்பதாகவும் கண்கலங்கிக்கொண்டே கூறியுள்ளார்.

மேலும் ஷிவாங்கி தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் . ஆம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஷிவாங்கியும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here