வரலாற்றில் இன்று ஏப்ரல் 2.!!

ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார்.

1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தர்களின் பொற்கோட்டையைக் கைப்பற்றினார்.

1800 – பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது.

1800 – லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார்.

1801 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரித்தானியக் கடற்படை தென்மார்க்குக் கடற்படைக் கப்பற்தொகுதியைக் கைப்பற்றியது.

1851 – நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.

1900 – புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1902 – உருசியப் பேரரசின் உட்துறை அமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திறக்கப்பட்டது.

1911 – ஆத்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.

1917 – முதல் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் செருமானியப் பேரரசு மீது போர்ப் பிரகடனத்தை அறிவிக்க சட்டமன்றத்தில் ஆணை கேட்டார்.

1921 – இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.

1930 – செவ்தித்து பேரரசி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து முதலாம் ஹைலி செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1972 – 1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லி சாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.

1975 – வியட்நாம் போர்: வட வியட்நாமியப் படையினரின் ஊடுருவலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக குவாங்கு காய் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.

1976 – இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[1]

1979 – சோவியத், சிவெர்திலோவ்சுக் நகரில் உள்ள உயிரி-ஆயுத ஆய்வுகூடத்தில் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகள் வெளியேற்றப்பட்டதால் 66 பேர் உயிரிழந்தனர், கணக்கிலடங்கா உயிரினங்கள் கொல்லப்பட்டன.

1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.

1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.

1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1989 – கியூபாவுடனான உறவுகளை சீர் செய்யும் நோக்கில் பிடல் காஸ்ட்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கியூபாவின் அவானா நகரை வந்தடைந்தார்.

1992 – யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 – இசுரேலியப் படைகள் பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயத்தைச் சுற்றிவளைத்ததை அடுத்து, பாலத்தீனப் போராளிகள் அங்கிருந்து விலகினர்.

2006 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வீசிய சுழற்காற்றினால் 29 பேர் உயிரிழந்தனர்.

2007 – சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2007 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.

2011 – மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது.

2012 – கலிபோர்னியாவில் ஒயிக்கோசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.

2014 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில், இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.

2015 – கென்யாவின் கரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here