சென்னை: பிரபல நடிகர் நெல்லை சிவா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். திருநெல்வேலியில் தங்கி இருந்தவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.
வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.
சில மாதங்களாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வந்த சிவாவிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.