கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ  பிரத்தியேக நிதி

கோலாலம்பூர்-
கூட்டரசுப் பிரதேச பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக சிறப்பு மானியம் வழங்கப்படுவதாக கூட்டரசீப் பிரதேங் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேச பகுதியில் உள்ள 15 பள்ளிகளுக்கு 2021 கூட்டரசு பிரதேச சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 15 பள்ளிகளுக்கும் மொத்தமாக 330,000 வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று (மே 11) 13 பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.

ஜாலான் பங்சார், தம்புசாமி பிள்ளை, ஜாலான் செராஸ், செந்தூல், அப்பர், சுங்கை பீசி, சிகாம்புட், சரஸ்வதி, செயின்ட் ஜோசப் (ஜாலான் செந்தூல்), கம்போங் பாண்டான், லாடாங் எடின்பர்க், லாடாங் புக்கிட் ஜாலில், ஜாலான் பிளட்சர் ஆகிய தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதில் 12 பள்ளிகளுக்கு தலா 20 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கப்பட்ட நிலையில் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளிக்கு மட்டும் 50 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக,  இந்தப் பள்ளிகளுக்கு நிதிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை அமைச்சர் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி எஸ்ஓபி விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது.

பள்ளிகளின் பிரதிநிதிகள் மாதிரி காசோலைகளைப் பெற்றுக் கொண்டனர்.

 

-எஸ். வெங்கடேஷ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here