சிலாங்கூரில் பல மசூதிகள், சூராக்கள் எம்சிஓவை கடைபிடிக்கவில்லை

ஷா ஆலம் : சிலாங்கூரில் உள்ள பல மசூதிகள் மற்றும் சூராக்கள் இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறியதாகக் கண்டறியப்பட்டதாக மாநில இஸ்லாமிய சமயத் துறை (ஜாய்ஸ்) இயக்குனர் டத்தோ முகமட் ஷாஜிஹான் அகமது தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை மீறுவது, தனிநபர்கள் முகக்கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை  கடைப்பிடிக்கத் தவறியது ஆகியவை அடங்கும்.

இந்த கட்டத்தில், ஜாய்ஸ் ஆலோசனை அல்லது நட்புரீதியான நினைவூட்டல்களை மட்டுமே வழங்கும். இருப்பினும் மக்கள் எங்கள் எச்சரிக்கைகளை புறக்கணித்தால் அல்லது இந்த SOP மீறல்கள் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட் -19 நிலைமை மற்றும் பரவுதல் நிலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால், ஜாய்ஸ் எடுத்த நடவடிக்கைகளை மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சிலாங்கூரில் உள்ள முஸ்லிம்களை அவர் கேட்டுக்கொண்டார்.

தொழுகையில் பங்கேற்கும்போது அனைவரும் பொறுப்புடன் செயல்படுவார்கள். விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here