கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் அதிவேகமாக செயல்படும் மலேசியா ; நேற்று மட்டும் 460,158 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16:

மலேசியாவின் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரது எண்ணிக்கை வியாழக்கிழமை (ஜூலை 15) 460,158 பேராக அதிகரித்துள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் குறித்த சிறப்புக் குழு இன்று (ஜூலை 16) தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு டுவீட்டில் நேற்று 304,807 பேர் தங்களது முதல் தடுப்பூசியையும் 155,351 பேர் தமது இராண்டாவது தடுப்பூசியின் அளவுகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் கூறியது.

இது மலேசியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 13,107,716 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மலேசியாவில் மொத்தமாக 8,949,099 நபர்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், 4,155,617 பேர் முழுமையாக தடுப்பூசியினை அதாவது இரண்டு அளவுகளையும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here