மலேசிய தினம் (செப்டம்பர் 16) என்பது மலேசிய நாடு உருவான தினமாகும். 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் மெர்டேக்கா சதுக்கத்தில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹமான் ‘புதிய மலேசியா’வைப் பிரகடனப்படுத்தினார். அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் நாள் மலேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மலேசியர்கள் என்பதுதான் நமது அடையாளம். மொழி, மதம், சமயம், கலாச்சாரம், பண்பாடு என நாம் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமை என்ற ஒற்றைச் சொல்லில் அனைவரும் மலேசியர்களாக இணைந்துள்ளோம்.