கோலாலம்பூர்: சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதமரின் சிறப்பு ஆலோசகராக பெங்கராங் எம்பி டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அவர் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றதாக அறியப்படுகிறது.
நாடளுமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகராக இருந்த அசாலினா தனது முகநூல் பக்கத்தில், ஒரு பதிவின் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
அத்தோடு, பிரதமரிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அசாலினா தனது துணை சபாநாயகர் பதவியை ஆகஸ்ட் 23 அன்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.