புகையிலை தயாரிப்பு கட்டுப்பாடு (திருத்தம்) விதிமுறைகள் 2018 -க்கு இணங்க உணவு வளாகங்களில் புகைபிடிப்பதற்கான தடையை அமல்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று ஒரு டுவிட்டர் பதிவில், கைரி சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டதாக கூறினார்.
கோவிட் -19 எஸ்ஓபிக்களுடன் இணங்குவதை கண்காணிக்கும் போது, அவர்கள் (அமலாக்க அதிகாரிகள்) புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம், ‘sekali harung (ஒரே நேரத்தில்) விதிமுறைகளை மீறுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
புகையிலை தயாரிப்பு கட்டுப்பாடு (திருத்தம்) விதிமுறைகள் 2018 இன் கீழ் அனைத்து உணவு வளாகங்களிலும் புகைபிடித்தல் தடை ஜனவரி 1, 2020 முதல் அமலில் உள்ளது என்பதனையும் அவர் நினைவுறுத்தினார்.