24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 5,143 – குணமடைந்தோர் 4,551

கடந்த 24 மணி நேரத்தில் 5,143 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,551,452 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஒரு அறிக்கையில், 4,551 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 2,455,767 ஆக உள்ளது. தீவிர சிகிச்சையில் 526 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 474 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 52 பேர் கோவிட்-19 தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 250 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 192 நோயாளிகள் கோவிட்-19 தொற்று எனவும்  மீதமுள்ள 58 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 5,130 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 4,923 மலேசியர்கள் மற்றும் 207 வெளிநாட்டினர் மற்றும் 13 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. புதிய நோய்த்தொற்றுகளில், நோயறிதலின் போது 2.4% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 வகையாகும்.

மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R0) 1.05 ஆக உள்ளது. புத்ராஜெயா 1.20 உடன் அதிகபட்ச அளவைக் கொண்டுள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

கோலாலம்பூர் (1.05), சிலாங்கூர் (1.04), நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் (1.02) மற்றும் கெலாந்தன் (1.01) R0 அளவை 1.00க்கு மேல் உள்ள மற்ற மாநிலங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here