பள்ளியின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த 5ஆம் படிவ மாணவி படுகாயம் அடைந்தார்

கூலாயில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்ததில் ஐந்தாம் படிவம் மாணவிக்கு எலும்பு முறிவு மற்றும் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை (நவம்பர் 16) மதியம் 1.26 மணியளவில் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக  கூலாய் OCPD Supt Tok Beng Yeow தெரிவித்தார்.

பள்ளி வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள நடைபாதையை நோக்கிச் செல்வதற்கு முன்பு மாணவி தனது தேர்வை முடித்திருந்தார்  என்று தோக் பெங் கூறினார். அப்போது அவள் நான்காவது மாடியில் இருந்து 40 மீ தொலைவில் விழுந்தாள்  என்று அவர் வியாழக்கிழமை (நவம்பர் 18) மேலும் கூறினார்.

பள்ளி அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தனர். பாதிக்கப்பட்டவர் அவசர சிகிச்சைக்காக இங்குள்ள தெமெங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  மாணவியின் தலை மற்றும் முகத்தில் இரத்தம் வழிந்தது, அவரது இரு கைகளும் உடைந்தன. மற்றும் உள் காயங்கள் ஏற்பட்டன,” என்று சுப்ட் டோக் மேலும் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 309 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here