ஷா ஆலம், நவம்பர் 29 :
சிலாங்கூரில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 569,100 இளம் பருவத்தினரில் மொத்தம் 73,653 பேர் இன்னும் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெறவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை, பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில், ஏனைய 495,447 பேர் தடுப்பூசியின் ஒரு டோஸாவது பெற்றுள்ளனர்.
இன்று நாடாளு மன்றத்தில், சிலாங்கூரில் தடுப்பூசி போடப்படாத 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிய விரும்பிய எலிசபெத் வோங்கின் (PH-Bukit Lanjan) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுடனும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி நிர்வாகம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்று டாக்டர் சித்தி மரியா கூறினார்.
“பள்ளிக்குச் செல்லாத பதின்ம வயதினர், ஒராங் அஸ்லி பதின்ம வயதினர் அல்லது மறுவாழ்வு மையங்கள் அல்லது தங்குமிடங்களில் உள்ளவர்கள் போன்ற தடுப்பூசி மையங்களுக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பதின்மவயதினர்களுக்கு, தடுப்பூசிகள் அவுட்ரீச் திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுவார்கள்,” என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களைப் பொறுத்தவரை, 275,237 பேர் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்று டாக்டர் சித்தி மரியா கூறினார், அதே நேரத்தில் மொத்த மக்கள் தொகை 4,551,800 பேரில் குறைந்தது 4.27 மில்லியன் பேர் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.
மேலும் 22,314 அரசு ஊழியர்களில் 132 பேர் அல்லது 0.59 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
– பெர்னாமா





















