கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 897 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 468 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 ஆகவும், 429 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 ஆகவும் உள்ளன.
பகாங் 155 புதிய சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (143) மற்றும் பேராக் (110) உள்ளன. நேற்று 762 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU) அவற்றின் மொத்த கொள்ளளவான 882 படுக்கைகளில் 30% அளவில் இருப்பதாகக் கூறினார்.
ICU படுக்கைகளின் பயன்பாடு கோலாலம்பூரில் மட்டுமே 50% திறனைத் தாண்டியது. இது 67% ஆக உள்ளது. மொத்தம் 162 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 18% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு புத்ராஜெயா (88%) மற்றும் சிலாங்கூரில் (64%) 50% திறனைத் தாண்டியுள்ளது.
பொது மருத்துவமனைகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை (கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகள்), ஆபத்தான படுக்கைகள் 52% ஆகவும், 57% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன. நேற்றும் ஆறு கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியிருந்தன. மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R0 அல்லது R-nought) 0.87 ஆக இருந்தது.