சிறையில் இருந்து வெளியே வந்த ஆடவர் முதியவரிடம் கொள்ளையடித்ததால் மீண்டும் கைது

கோலாலம்பூரில் சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளி, மீண்டும் வயதானவரிடம்  கொள்ளையடித்ததால் மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வியாழன் (டிசம்பர் 9) அன்று செராஸ் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மாநகர  துணை காவல்துறைத் தலைவர்  டத்தோ யஹாயா ஓத்மான், 29 வயதுடைய சந்தேக நபர், தாமான் கெனாட் அருகே நடந்த சம்பவத்தை குற்றத்தடுப்பு ரோந்துப் படையினர் பார்த்த பின்னர் பிடிபட்டதாகக் கூறினார்.

டிசம்பர் 6 அன்று நடந்த சம்பவம் செராஸ் காவல்துறை தலைமையகத்தில் இருந்து குற்றத்தடுப்பு ரோந்துப் படையினரால் பார்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பையுடன் தப்பிக்க முயன்ற அந்த நபரை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது ஒரு பேனாக் கத்தியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரின் சோதனைகள் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் காட்டியது. மேலும் அவர் 25 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கொண்டிருந்தார் என்று அவர் கூறினார். சந்தேகநபர் டிசம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்ததாக  செய்ததாக DCP யஹாயா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here