இன்றைய கோவிட் பாதிப்பு 3,140 – குணமடைந்தோர் 4,278

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,140 கோவிட் -19  தொற்றுகளை பதிவு செய்துள்ளது.  இது நேற்று பதிவான 2,589 வழக்குகளில் இருந்து அதிகரித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,724,684 வழக்குகளாக உள்ளது என்றார்.

4,278 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 353 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 275 பேர் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 189 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 125 நோயாளிகள் கோவிட்-19 தொற்று எனவும் மீதமுள்ள 64 பேருக்கு  தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 3,082 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,910 மலேசியர்கள் மற்றும் 172 வெளிநாட்டினர் மற்றும் 58 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 2% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று நான்கு கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here