நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. காவல்படைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி கூறுகையில் சிலாங்கூர் 25 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து பகாங் (18) மற்றும் கெளந்தான் (3) உள்ளன.
ஐந்து பேர் இன்னும் காணவில்லை. விரைவில் அவர்களைக் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சிலாங்கூரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தாமான் ஸ்ரீ மூடாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.