LRT தடம் புரண்ட விபத்து: மேலும் இரு பெட்டிகள் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன; சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

கோலாலம்பூர்:

கடந்த வாரம் சான் சோ லின் (Chan Sow Lin) LRT நிலையம் அருகே தடம் புரண்ட ரயில்வண்டியின் மேலும் இரண்டு பெட்டிகள் இன்று வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம், விபத்துக்குள்ளான ஆறு பெட்டிகளும் தற்போது முழுமையாகத் தண்டவாளத்தில் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அதன் சேவை நிறுவனமான Rapid KL தெரிவித்துள்ளது.

எஞ்சிய பெட்டிகளை திங்கள்கிழமை (நாளை) காலைக்குள் பயன்பாட்டு லோரி (Utility Truck) மூலம் பாதுகாப்பாகப் பணிமனைக்குக் (Depot) கொண்டு செல்வதை உறுதி செய்ய, தொழில்நுட்பக் குழுவினர் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியோடு, உள்கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன:மின்சார கேபிள்கள்: விபத்தினால் சேதமடைந்த மின்சாரக் கம்பிகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தண்டவாளத்தின் முக்கியப் பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் மீட்புப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பயணிகள் காட்டிய பொறுமைக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ள ரேபிட் கேஎல் நிர்வாகம், நிலைமையை விரைவில் சரிசெய்யத் தங்களால் இயன்றவரை விரைவாக உழைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here