கோலாலம்பூர், ஜனவரி 9 :
மலாக்கா, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, ஏனெனில் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகலில் நிலவரப்படி தொடர்ந்து குறைந்து வருகிறது.
மலாக்காவில், மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர் Lt Col (PA) Cutbert John Martin Quadra கூறுகையில், இன்று காலை 91 குடும்பங்களைச் சேர்ந்த 341 பேர் ஜாசினில் உள்ள மூன்று PPS இல் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று பிற்பகல் 85 குடும்பங்களைச் சேர்ந்த 315 பேராக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
பகாங்கில், இன்று காலையில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 301 நபர்களுடன் ஒப்பிடும்போது, இன்று பிற்பகல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 292 ஆகக் குறைந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜேபிபிஎன்) செயலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு 85 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் எட்டு பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், பெக்கான் அதிகபட்சமாக 161 பேரைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து ரோம்பின் (79) மற்றும் மாரான் (52) ஆகிய மாவட்ட்ங்களும் உள்ளன.
ஜோகூரில், வெள்ளம் குறைந்து வருகிறது, இன்று காலையில் பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டிருந்த 3,714 பேருடன் ஒப்பிடும்போது, இன்று மாலை 4 மணி நிலவரப்படி பிபிஎஸ் எண்ணிக்கை 3,441 ஆகக் குறைந்துள்ளது.
ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் கூறுகையில், நான்கு மாவட்டங்களில் உள்ள 46 பிபிஎஸ் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர். செகாமாட்டில் அதிகபட்சமாக 1,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து மூவார் (1,180), தங்காக் (686) மற்றும் பத்து பகாட் (129) ஆகியோரும் தங்கியுள்ளனர் என்றார்.