21 நாட்களுக்கு பிறகு கோவிட் தொற்று சற்று குறைந்து 2,641ஆக பதிவு

சுகாதார அமைச்சகம் இன்று 2,641 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,788,860 ஆக உள்ளது. டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு, 21 நாட்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மிகக் குறைவு.

தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 1.8% குறைந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்கள் வாரியாக புதிய தொற்றுகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் மட்டுமே வெளியிடும்.

2,888 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நேற்றைய (ஜனவரி 9) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:  சிலாங்கூர் (770), ஜோகூர் (326), கோலாலம்பூர் (272), கெடா (223), சபா (198), கிளந்தன் (195), பினாங்கு (186), நெகிரி செம்பிலான் (158), பகாங் (148), மலாக்கா (139), பேராக் (121), தெரெங்கானு (90), சரவாக் (22), லாபுவான் (18), புத்ராஜெயா (14), பெர்லிஸ் (8).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here