கோவிட் தொற்று 3,198 – குணமடைந்தோர் 3,200

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,198 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது, இது நேற்று பதிவான 3,175 தொற்றுகளில் இருந்து சற்று அதிகரித்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,795,233 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 3,200 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,723,599 ஆக உள்ளது.

இதற்கிடையில், 215 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் (ICU) உள்ளனர். அவர்களில் 185 பேருக்கு கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். ICU இல் உள்ள நோயாளிகளில், 105 பேருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களில் 65 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று 2,895 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,753 மலேசியர்கள் மற்றும் 142 வெளிநாட்டினர் மற்றும் 303 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள். இதில் 224 மலேசியர்கள் மற்றும் 79 வெளிநாட்டவர்கள் உள்ளனர்.

நோயறிதலின் போது 1.2% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுகள் என்று புதிய நோய்த்தொற்றுகள் பற்றி நூர் ஹிஷாம் கூறினார். இன்று எட்டு புதிய கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here