இரு தினங்களுக்கு முன் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் இன்று சடலமாக மீட்பு

கோத்த கினபாலு, பெலூரான் மாவட்டத்தில் உள்ள மான் கூன் தோட்டத்தில் (ஜன. 15) ஆற்றில் குளிக்க சென்றபோது காணாமல் போன 4 வயது சிறுவன் முகமட் ரிட்வான் சுப்ரியன்டோ முகமட் ஐடில் திங்கள்கிழமை (ஜனவரி 17) காலை அவர் கடைசியாகப் பார்த்த இடத்திலிருந்து 1 கிமீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டார்.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறுகையில், திணைக்களத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் சிறுவனின் உடலை காலை 9.50 மணியளவில் கண்டெடுத்தன. மருத்துவ அதிகாரிகள் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும் உடல் அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here