சுகாதார அமைச்சகம் நேற்று ஆறு கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்தது. இறப்பு எண்ணிக்கை 35,542 ஆக உள்ளது.
ஆறு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூர் (3), பேராக் (1), சபா (1) மற்றும் தெரெங்கானு (1) ஆகிய மாநிலங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், அமைச்சகம் 2,579 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்தது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4,445,897 ஆக உள்ளது.