பேராக், பகாங், சிலாங்கூர், ஜோகூர் மற்றும் சபா ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேராக்கில் உள்ள மஞ்சோங் மற்றும் பாகன் டத்தோ ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா கூறியது. பகாங்கில் லாபிஸ்; சிலாங்கூரில் கோலா லங்காட்; ஜோகூரில் செகாமட், மூவார், பத்து பகாட், குளுவாங் மற்றும் மெர்சிங்; மற்றும் சபாவில் சண்டகன், பெலூரன் மற்றும் குடாத் ஆகிய பகுதிகள் மழையால் பாதிக்கக்கூடும்.