ஜோகூரின் இடைக்கால சுல்தானாக துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நியமனம்

கோலாலம்பூர், ஜூன் 16 :

துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் இன்று முதல் ஜோகூர் ரீஜண்டாக அதாவது ஜோகூரின் இடைக்கால சுல்தானாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.

15 ஆவது ஜோகூர் மாநில சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தின், தொடக்கத்தில் பேசிய சுல்தான், தனது உரையில் இவ்வாறு கூறினார்; “இன்று முதல் இடைக்கால சுல்தானாக பட்டத்து இளவரசர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றிலிருந்து சிறிது காலம் நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்றார்.

துங்கு இஸ்மாயில், சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் பெர்மைசூரி, ராஜா ஜரித் சோபியா சுல்தான் இட்ரிஸ் ஷா ஆகியோரின் மூத்த மகனாவார்.

இவர் ஜனவரி 2010 இல் பட்டத்து இளவரசராக ஆவதற்கு முன்பு, ஏப்ரல் 2006 இல் ஜோகூர் ராஜா மூடாவாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here