பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம், 22 மாத கூட்டணி ஆட்சியின் தோல்விகளுக்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மீது குற்றம் சாட்டியுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் PH வெற்றி பெற்ற பிறகு மகாதீரால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாததால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது .
பயான் லெபாஸில் நடந்த ஒரு நிகழ்வில் ” நல்ல நிர்வாகம் மற்றும் நல்லாட்சி இல்லாமல் மீண்டும் முன்னேற்ற பாதையில் செல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.-
முந்தையஆட்சிக் காலத்தில் மக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் மற்றும் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நாடு மிகப் பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதையும் உறுதி வேண்டும் என்றார்.