பி. ராமமூர்த்தி,பெந்தோங், நவ. 16-
வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் பெந்தோங் லூரா பிலுட் சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக டத்தோஸ்ரீ சந்திரா பலபேதா போட்டியிடுகிறார்.
இந்த லூரா பிலுட் சட்டமன்றத் தொகுதியில் சீன வாக்காளர்கள் 12,794 பேர், மலாய் வாக்காளர்கள் 9,237 பேர், இந்திய வாக்காளர்கள் 2,272 பேர். மொத்தம் 24,304 வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தச் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு டத்தோஸ்ரீ சந்திரா அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.