ஏதேன்சில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் பலி

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து இன்று 350 பயணிகளுடன் திஸ்லனொய்கி நகருக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில், அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயிலுடன் மோதியத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.

இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here