நியூசிலாந்து இணைய பாதுகாப்புக் கருதி, தனது நாடாளுமன்ற கட்டமைப்பில் உள்ள சாதனங்களில் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
டிக் டாக் பயனாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களின் தங்குமிடம் போன்றவை சீன அரசாங்கத்தின் பிடியில் சிக்கிவிடக்கூடும் என்று, உலகின் பல நாடுகள் கவலையுறும் நிலையில் நியூசிலாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து நாடாளுமன்ற கட்டமைப்பில் உள்ள தொர்பு சாதனங்கள் அனைத்திலும் டிக் டாக் செயலி இம்மாத முடிவில் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை நியூசிலாந்தில் உள்ள இணைய பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை, அரசாங்க கலந்துரையாடல், மற்ற நாடுகளுடனான கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றின் முடிவில் டிக் டாக்கை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக நியூசிலாந்து நாடாளுமன்ற தலைமை செயல் அதிகாரி ரஃபயேல் கொன்சாலஸ் மொன்டேரோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.