விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபரால் பரபரப்பு

தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று தேயாகு விமான நிலையம் வந்தடைந்த ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ321-200 ரக விமானம் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது.  தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்தபோது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கதவை திறந்துள்ளார்.

இதனால் விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். பலருக்கு மூச்சு திடீரென திணறல் ஏற்பட்டது பிறகு சரியாக மதியம் 12.40 மணி அளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் 9 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பயணி கதவை திறந்தது குறித்து காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில் ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவசரகால கதவுகளை நிர்வகிப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றியதா என்பதை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here