பட்டர்வொர்த்: வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் பினாங்கை “யாரோ” தங்கள் அப்பாவின் சொத்தைப் போல நடத்துவதாகக் கூறுகிறார். முன்னாள் பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம் சதீஸ், “யாரோ” ஒரு பேரரசருக்கு ஒப்பிட்டார். மேலும் அந்த நபருக்கு தேர்தலில் டிஏபியின் வேட்பாளர்களைத் தீர்மானிக்க முழு உரிமையும் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.
புதிய முகம், இளம் தலையினர் இணைய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள் (பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கைவிடப்பட்டதற்கான காரணம்). உண்மையான காரணம் ஒருவர் பினாங்கைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். மாநில டிஏபிக்கு கூட எந்த கருத்தும் இல்லை. இது ஒரு ஆடவரின் முடிவு என்று அனைத்து பினாங்குவாசிகளுக்கும் தெரியும். யாரோ ஒருவர் பினாங்கை தனது தந்தையின் சொத்து போல நடத்துகிறார் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று, டிஏபி 19 வேட்பாளர்களை தேர்தலுக்கு அறிவித்தது. காபந்து மாநில அரசாங்கத்தில் ஐந்து நிர்வாக கவுன்சிலர்கள் உட்பட ஏழு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக் காரணங்களுக்காக வெளியேறியதைத் தவிர, அவரும் மற்ற ஐந்து பேரும் அதே முகாமில் இல்லாததால் களமிறக்கப்படவில்லை என்று சதீஸ் கூறினார். தற்போதைய முதல்வர் சோவ் கோன் இயோவை ஆதரிப்பதற்காக வெளிப்படையாகப் பேசியதற்காக அவர்கள் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.





















