பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளதாக வெளியான தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற விஷயம் அண்மையில் பேசுபொருளாக மாறியது. அந்தப் பேச்சு தனிந்துள்ள நிலையில், தற்போது அவரது மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் உயிருடன் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண் ஒருவர் இந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனி, மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, ஊடகத்தில் செய்திகளை அறிந்துக்கொண்டேன். கடந்த சில தினங்களாக அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறி வருவதையும் செய்திகளில் அறிந்துகொண்டேன். பிறகு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அவர்களுடன் உணவருந்தி விட்டு வந்துள்ளேன்.

இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கின்றேன். உண்மையில் இந்தச் செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கின்றேன். நன்றி வணக்கம் என மதிவதனியின் சகோதரி என அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பாக பரபரப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். மதிவதனியின் அக்கா வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பிரபாகரன் பற்றியோ, அவரது மகன் பாலச்சந்திரன் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here