ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர், மாநிலத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று இஸ்தானா புக்கிட் பெலாங்கியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜோகூர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், துங்கு மஹ்கோட்டாவும் கலந்து கொண்டதாக சுல்தான் இப்ராஹிமின் அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.
மேலும் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி மற்றும் மாநில செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இன்று காலை 11.20 மணிக்கு அரண்மனைக்கு வந்த அன்வாருடன் ஜோகூர் சுல்தானது சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.