தாய் மற்றும் மகனின் சடலங்கள் வீட்டின் கழிவறையில் சாய்ந்த நிலையில் கண்டெடுப்பு

டெப்போக்:

டெப்போக், சினேரியலுள்ள ஒரு வீட்டில் , தாய் மற்றும் மகனின் சடலங்கள் மெட்ரோ ஜெயா காவல்துறையின் புலனாய்வுக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டன

68 வயதான கிரேஸ் அரிஜானி ஹரஹபன் மற்றும் 38 வயதான டேவிட் அரியாண்டோ விபோவோ என்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான இரண்டு மாடி வீட்டில், எலும்புக்கூடு ஆக மாறிய நிலையில் அந்த இரு சடலங்களும் காணப்பட்டன .

வீட்டில் நடந்த விசாரணை இரண்டரை மணி நேரம் நீடித்தது என்றும், இது இரண்டாவது முறையாகவும் மேற்கொள்ளப்பட்டது என்று மெட்ரோ ஜெயா காவல்துறை செய்தித் தொடர்பாளர் சாமியன் தெரிவித்தார்.

“விசாரணைக்குப் பிறகு, அவர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது திடீரென்று இறந்தார்களா, அவர்கள் எப்படி இறந்தார்கள்,  என்பதை போலீசார் விசாரணையின் பின் முடிவு செய்வார்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த வியாழன் அன்று மேற்கு ஜாவாவின் டெபோக்கில் உள்ள அவர்களது வீட்டில் ஒரு பெண் மற்றும் அவரது மகனின் உடல்கள் எலும்புக்கூடான நிலையில், பூட்டப்படாத கழிவறையின் சுவரில் சாய்ந்த நிலையில் சடலங்கள் காணப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

சம்பவம் நடந்த இடத்தில், சாக்லேட் பொட்டலமும், மடிக்கணினியில் ‘யாராக இருந்தாலும் உங்களுக்கு’ (to you whomever) என எழுதப்பட்டிருந்த குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here