JSPTயின் இடைக்கால இயக்குநராக முகமட் நஸ்ரி நியமனம் – அயோப் கான்

கோலாலம்பூர்:

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) துணை இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஓமர், அந்தத் துறையின் இடைக்கால இயக்குநராக இன்று முதல் நியமிக்கப்பட்டார்.

நாளை கட்டாய ஓய்வு பெறவுள்ள டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீமுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாட் காசிம் முகமட் நஸ்ரியிடம் கடமைகளை ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோலாலம்பூர் காவல்துறை பயிற்சி மையத்தில் தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை முன்னிலையில் நடந்தது.

முகமட் நஸ்ரியின் அறிவு மற்றும் அனுபவத்தால், இந்தப் பதவியுடன் கூடிய அனைத்து பணிகளை மற்றும் பொறுப்புகளை அவரால் செய்ய முடியும் என்று, அயோப் கான், தனது உரையில், கூறினார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய காவல்துறையில் பணிபுரிந்த மாட் காசிம் நாளை பணி ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here