தைப்பிங்:
கம்போங் சுங்கை ஜெராய் அருகே ஜாலான் புக்கிட் காந்தாங்கில் நேற்று இரண்டு கார்கள் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.37 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே தைப்பிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“விபத்தில் ஹோண்டா சிட்டி மற்றும் பெரோடுவா மைவி ஆகிய கார்கள் மோதிக்கொண்டன என்றும் இதில் ஹோண்டா சிட்டியில் பயணித்த மூதாட்டி இறந்தார், அவருடன் அக்காரில் பயம் செய்த 5 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பெரோடுவா மைவியில் பயணஞ் செய்த நான்கு பேர் காயமடைந்தனர், என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“சம்பவ இடத்திலிருந்த மருத்துவக் குழுவினர் குறித்த மூதாட்டி இறந்துவிட்டதை உறுதிசெய்ததைத் தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.