தொழிற்சாலை இயந்திரத்தில் விழுந்து வெளிநாட்டுத் தொழிலாளி பலி -கிள்ளானில் சம்பவம்

கிள்ளான் :

தொழிற்சாலையின் மிக்ஸிங் இயந்திரத்தில் தவறி விழுந்ததில், வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 8) உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

சம்பவ இடத்திலிருந்து மருத்துவ அதிகாரிகள் குழு, பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்ட்தாக உறுதிப்படுத்தினர்,” என்று அவர் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் கட்டுமானத் தொழிலாளியாக தற்காலிக வேலை அனுமதி பெற்றிருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here