ராகவா லாரன்சுடன் இணைந்து நடிக்கவிருந்த படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார் நயன்தாரா.
அண்மையில் லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சந்திரமுகி 2’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், அடுத்து ‘ஜிகிர்தண்டா 2’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ள கதையில், ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ராகவா லாரன்ஸ்.
இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருந்தார். மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா தரப்பில் இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் ‘சந்திரமுகி 2’ பட வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததே அவரது விலகலுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.