11 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ததாக விவசாயி மீது குற்றச்சாட்டு

கோலா கங்சார்:

ந்த மாத தொடக்கத்தில் தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு விவசாயி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி ரோஹைடா இஷாக் முன் வாசிக்கப்பட்ட.தனக்கு எதிரான குற்றச்சாட்டை 41 வயதான சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்,

குற்றப்பத்திரிகையின் படி, கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஜெரிக், ஆயிர் காண்டாவில் உள்ள ஒரு பண்ணை குடிசையில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவத்தின் போது 11 வயது மற்றும் மூன்று மாதங்கள் மட்டுமேயான தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376(3)ன் கீழ் வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கசையடிகளும் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரின் வளர்ப்பு மகள் என்பதாலும் தற்போது அவர் தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் இவ்வழக்கில் சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

வழக்கை மீண்டும் செவிமடுக்க நவம்பர் 15 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி அந்த நபரை அக்டோபர் 5 ஆம் தேதி போலீசார் கைது செய்ததாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here