ஜோகூரில் ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை மற்றும் அவரின் காதலி கைது

ஜோகூர் பாரு:

பூலாயில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை (அக். 13) ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுதொடர்பில் காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, 37 மற்றும் அவரது காதலி ,39 இஸ்கண்டார் புத்திரி மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ரஹ்மட் ஆரிஃபின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் வீட்டின் குளியலறையில் இருப்பதாகவும், பலவீனமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகவும் காவல்துறைக்கு ஒரு பெண்ணிடமிருந்து புகார் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் போலீசார் பாதிக்கப்பட்டவரை மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பாதிக்கப்பட்டவரின் உடலில் பழைய காயங்கள் உட்பட உடல் உபாதைகள் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன.

அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.13 மணியளவில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, அவரது தந்தை மற்றும் அவரது தந்தையின் காதலியுடன் வசித்து வந்தார் என்றும், தற்போது பாதிக்கப்பட்டவர் இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

சந்தேகநபர்கள் இருவரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை ஒருவாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a)இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here