உலு சிலாங்கூர்:
செரெண்டா கோல்ஃப் ரிசார்ட்டுக்கு அருகில் உள்ள ஜாலான் கோலா குபு பாரு ரவாங்-புக்கிட் புருந்தோங் என்ற இடத்தில் இன்று இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில துணை இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
உடனே ரவாங்தீயணைப்பு நிலைய உறுப்பினர்களின் உதவியுடன் கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் 11 பேர் கொண்ட குழு தீயணைப்பு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.