தங்காக் அருகே NSE நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, வாலிபர் பலி

தங்காக்:

டக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE), வடக்கு நோக்கிச் செல்லும் KM164.2 இல், தனது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில், சாலையில் வந்த வாகனங்கள் மோதி 17 வயது வாலிபர் உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை (அக் 29) அதிகாலை 5.30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் வந்ததாக தாங்காக் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் ரோஸ்லான் தாலிப் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் மலாக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அவர் சாலையில் விழுந்ததாகவும்அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் அடிப்படையில் அடையாளம் தெரியாத வாகனங்கள் அவரை மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

1987ஆம் ஆண்டு சாலை மற்றும் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here